குற்றத்தை மறைக்க கப்பம் பெற்ற பொலிஸார்…!!

Read Time:2 Minute, 30 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)வெளிநாட்டில் இருந்து மதுபானங்களை சட்டவிரோதமாக கொண்டுவந்து விற்பனை செய்துவரும் வர்த்தகர் ஒருவரிடம் பொலிஸார் இருவர் ஒரு இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸார் இருவரும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் அமைந்துள்ள வத்தளைப் பகுதிக்கு சோதனை நடவடிக்கைக்கு சென்ற இந்த பொலிஸார் இருவரும், அவரது சட்டவிரோத வர்த்தகத்தை மூடி மறைப்பதற்காக அவரிடம் இருந்து 4 வெளிநாட்டு மதுபானப் போத்தல்களையும் மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபாவையும் கப்பமாக கோரியுள்ளனர்.

இதற்கமைய குறித்த வர்த்தகரும் வங்கிக்கு சென்று பொலிஸார் கப்பமாக கோரிய பணத்தை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பேலியகொட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள் அறிந்து கொண்டதுடன், அவர்களை விசாரணைக்காக உடனடியாக பொலிஸ் நிலையம் வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் குறித்த பொலிஸார் இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு செல்லவில்லை என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸார் இருவருக்கும் எதிரான விசாரணைகள் பேலியகொட பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோர விபத்தில் இருவர் பலி: 9 பேர் படுகாயம்…!!
Next post இளம் பெண்களுடன் விடிய, விடிய கும்மாளம்: உசைன் போல்ட் மீது காதலி ஆத்திரம்…!!