பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரத்தில் 8 மாத பெண் குழந்தை கொலை: பீகாரை சேர்ந்த வாலிபர் கைது…!!

Read Time:5 Minute, 6 Second

201608261114295240_8-month-girl-baby-molested-youth-arrest-near-pollachi_SECVPFகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பீகாரை சேர்ந்த 25 பேர் குடும்பத்துடன் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்கள்.

இங்கு டும்குன் (24), அவரது மனைவி மலாதேவி (20) ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ரீட்டா (2), சரிதா என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

நேற்று மாலை கணவன்-மனைவி 2 பேரும் குழந்தை சரிதாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

அப்போது குழந்தை சரிதா உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் பதற்றத்துடன் குழந்தையை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை சரிதா இறந்து விட்டது தெரியவந்தது. ஆரோக்கியமாக இருந்த குழந்தை திடீரென ரத்த வெள்ளத்தில் இறந்ததால் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 8 மாத பெண் குழந்தை சரிதாவை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்றும் அதனால் குழந்தை இறந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குழந்தையின் பெற்றோர் வேலைப்பார்க்கும் தென்னை நார் தொழிற்சாலை பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சஞ்சித் (22) என்ற வாலிபரை தவிர அனைவரும் அங்கு இருந்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபர் எங்கு என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த நபர் இரவு முதல் காணவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு சஞ்சித் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடினர். அப்போது அவர் ரெயிலில் பீகார் செல்ல முடிவு செய்து பஸ்சுக்கு காத்திருந்தார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தான் 8 மாத குழந்தை சரிதாவை பாலியல் பலாத்காரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் கைதான சஞ்சித் தெரிவிக்கும் போது, வீட்டில் இரவு குழந்தை தனியாக இருக்கும் போது நான் சென்றேன். பின்னர் ஒரு இடத்துக்கு குழந்தையை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது.

இதனால் எரிச்சல் அடைந்த நான் ஆத்திரத்தில் குழந்தையின் காலை பிடித்து கொண்டு தலையை தரையில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்தது. இதையடுத்து நான் குழந்தையை மீண்டும் இருந்த இடத்துக்கே கொண்டு போய் போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

தற்போது ஊருக்கு புறப்பட தயாரான போது தான் போலீசில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.

8 மாத கைக்குழந்தையை காமகொடூரன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண்களுடன் விடிய, விடிய கும்மாளம்: உசைன் போல்ட் மீது காதலி ஆத்திரம்…!!
Next post உங்கள் கைகளில் உள்ள கருமையை 20 நிமிடத்தில் போக்க இலகுவா வழி! பாருங்கள்! வீடியோ