நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!
அனுராதபுரம் – பசவக்குளத்தில் நீரில் மூழ்கி 32 வயதான நபரொருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார்.
ரக்வான – மாதம்பே பகுதியைச் சேர்ந்த அனுராதபுரத்திற்கு யாத்திரைச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழந்த நபருடன் யாத்திரைச் சென்ற நபர் ஒருவரே குறித்த நபரை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று (26) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating