இரு வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயம்…!!
திருகோணமலை – மாவட்டத்தில் உப்புவெளி மற்றும் சேருநுவர பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீனக்குடா – கண்டி வீதியில் உள்ள சர்வோதய விடுதியில் அவசித்து வரும் மோட்டார் சைக்கிள் சாரதியான எச்.ஏ.பீ.சஹானா சதுரங்கனி (28 வயது) அவரது தங்கையான எச்.ஏ.பீ.சுறனி நிவர்த்திகா (26 வயது) மற்றும் பிள்ளைகளான எச்.ஏ.சாவித்தியா (03) எச்.டபிள்யூ.சதுன் (04) ஆகியோரே விபத்தில் காயமடைந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது உப்புவெளி சந்தியில் டிமோ பட்டா லொறி இவர்களை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டினம் பகுதியில் மீன் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்று – லங்கா பட்டினம் பகுதியைச் சேர்ந்த கே.சுமித்ரா தேவி (48 வயது) மற்றும் அவரது தம்பி டி.சிவானந்தன் (47 வயது) எனவும் மீன் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating