வெள்ளவத்தையில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை…!!
வெள்ளவத்தை ஹெவலொக் வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரினால் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் விடுதி முகாமையாளரும் அடங்கும்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 28,31 மற்றும் 41 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும், மொரட்டுவை, அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating