பயங்கர விபத்து – சம்பவ இடத்திலேயே சாரதி பலி…!!

Read Time:2 Minute, 6 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தார்கள்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இவ்விபத்து நேற்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,

நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும் புளியாவத்தை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கெப் ரக வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கெப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளவத்தையில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை…!!
Next post கனடா செல்ல பயணித்தவர்களுக்கு வழியில் நேர்ந்த கதி…!!