சந்தேகமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 19 Second
சந்தேகமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் தலாவ, திரப்பனே பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம், அந்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலாவ, திரப்பனே முதலாவது ஒழுங்கையில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating