அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் மாயம்…!!
Read Time:1 Minute, 21 Second
மொறட்டுவை அங்குலானை பிரதேசத்தில் தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள கடலில் மூழ்கி 15 வயதான சிறுவன் காணாமல் போயுள்ளார்.
சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது பெரிய அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குலானை பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளார்.
கடற்படை சுழியோடிகள் மற்றும் பொலிஸார் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குலானை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating