கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி…!!
கோவை சுண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு சர்வஷித் என்ற மகன் உள்ளான்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்விரோதம் காரணமாக தினேஷ், நித்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தினேஷ், வடவள்ளி போலீசில் புகார் செய்தார். ஆனால் இது சம்பந்தமாக போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் நேற்று தினேஷ் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று தினேஷ் தனது மனைவி நித்யா, மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திடீரென தனது உடல் மீதும், மனைவி உடலிலும் தினேஷ் மண்எண்ணையை ஊற்றினார்.
அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தினேசையும், நித்யாவையும் தடுத்து காப்பாற்றினர்.பின்னர் அவர்களிடம் ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி தினேஷ் கூறியதாவது:-
எங்கள் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்விரோதத்தில் என்னையும், எனது மனைவியையும் தாக்கினர். இதுபற்றி வடவள்ளி போலீசில் புகார் செய்தேன், போலீசார் சாதாரண பிரிவில் வழக்குபதிவு செய்ததால் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வந்து விட்டனர்.தற்போது 2 பேரும் மீண்டும் எங்களை மிரட்டி வருகிறார்கள். இதனால் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating