அம்பத்தூரில் 2½ வயது குழந்தைக்கு மது கொடுத்த 2 பேர் கைது…!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுவனை மது குடிக்க வைத்து அதை வீடியோ பதிவு செய்த காட்சிகளை வாட்ஸ்அப்பில் வாலிபர்கள் பரவ விட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல சிறுவர்களை புகை பிடிக்க வைத்தல், போதை பொருள் கொடுப்பது போன்ற வீடியோக்களும் வெளிவந்தன.
இந்த நிலையில் அம்பத்தூரில் 2½ வயது குழந்தைக்கு மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர் மேனாம்பேடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று மதியம் வீட்டில் தனது நண்பர்கள் பழனி, ராமு ஆகியோருடன் மது அருந்தி இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 2½ வயது ஆண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. உடனே செல்வம் குழந்தையை தூக்கி கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
இதைபார்த்த குழந்தையின் தாய் செல்வம் தனது குழந்தையை கொஞ்ச தூக்கி சென்று உள்ளார் என நினைத்தார். சிறிது நேரம் கழித்து குழந்தையை தாயிடம் செல்வம் கொடுத்தார்.
அப்போது குழந்தை மயக்க நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தட்டி எழுப்பி பார்த்தார். ஆனால் குழந்தை மயக்க நிலையிலேயே இருந்தது. மேலும் குழந்தையின் வாயில் இருந்து மது வாசனை வந்தது. உடனே செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தை மயக்க நிலையில் இருப்பது பற்றி கேட்டார். அதற்கு செல்வம், குழந்தை வாயில் டீஸ்பூன் மூலம் மது கொடுத்ததாக போதையில் கூறினார்.
இதையடுத்து குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து செல்வம், பழனி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராமுவை தேடி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating