கழுத்தை அறுத்து சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடி சிக்கியது…!!

Read Time:7 Minute, 39 Second

201608271537415135_Neck-and-cut-off-the-boy-killed-a-couple-embroiled_SECVPFகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்த தொழிலாளி முருகேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் சக்தி பரமேஸ்வரி, சங்கரேஸ்வரி, மகன் நித்தீஷ் (வயது 4). சின்னசேலம் அருகே கன்னியாமூரில் உள்ள பள்ளியில் நித்தீஷ் பிரிகேஜி படித்து வந்தான்.

தினமும் அவன் பள்ளிக்கு வேனில் சென்று வந்தான். கடந்த 23-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு திரும்பினான். வீட்டு முன்பு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். இரவு 8 மணி ஆன பின்பும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர். வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறை பக்கம் சென்று தேடியபோது அங்கு ரத்த துளிகள் சிதறி கிடந்ததை பார்த்தனர்.

கழிவறை கதவு திறக்கப்பட்டிருந்தது. அங்கு ரத்த வெள்ளத்தில் சிறுவன் நித்தீஷ் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நித்தீஷ் பிணத்தை அவனது தந்தை வீட்டிற்குள் எடுத்து வந்தார். போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகாள் நடந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கிராம நத்தம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது நித்தீஷ் பிணமாக கிடந்த கழிவறையை மோப்பம் பிடித்து விட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு ஓடியது. அந்த வீட்டில் கிடந்த துண்டை கவ்வியது.

பின்னர் அங்கிருந்து வெளியே ஓடிவந்து முருகேசனை கவ்விப்பிடித்தது. இதனால் முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நித்தீஷ் பிணத்தை கழிவறையில் இருந்து வீட்டிற்குள் எடுத்து வந்ததால் மோப்ப நாய் தன்னை கவ்வி பிடித்தது என்று தெரிவித்தார்.

மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் முருகேசனுக்கு 2 மகள்கள் பிறந்த பின்னரே நித்தீஷ் பிறந்தான். இதனால் அவன் மீது முருகேசன் அதிகம் பாசமாக இருந்தார் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என போலீசார் முடிவு செய்தனர். பின்னர் இந்த கொலைக்கு சொத்து தகராறு காரணமா? முன்விரோதம் காரணமா? என்று விசாரித்தனர். அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர் கள்ளக்காதல் பிரச்சினையில் நித்தீஷ் கொலை செய்யப்பட்டானா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், ரமேஷ்பாபு, சுதாகர், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

முருகேசன் வீட்டின் அருகே ராமர்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி(19). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. ராமர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

ராமர் வெளிநாட்டில் இருந்த போது கள்ளக்குறிச்சி கூகையூரைச் சேர்ந்த அருள்ராஜ்(20) என்பவருக்கும், பரமேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நெருங்கி பழகி வந்தனர். இவர்களது கள்ளக்காதல் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் ராமர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அதனால் கள்ளக்காதலனை பரமேஸ்வரி சந்திக்க முடியவில்லை. கணவர் ஊருக்கு சென்ற பின்பு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்தார்.

இருவரும் தனிமையில் இருந்தனர். தற்செயலாக இதைப்பார்த்த முருகேசன் அவர்களை கண்டித்தார். இதனால் பரமேஸ்வரி அச்சத்தில் இருந்து வந்தார். முருகேசனை பழிவாங்க அவரது மகனை தீர்த்துகட்ட பரமேஸ்வரி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மாலை பரமேஸ்வரி வீட்டில் நித்தீஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் டி.வி. பார்த்து கொண்டிருந்தான். திடீரென்று அவன் வீட்டில் இருந்து வெளியே வந்தான். இந்தநேரத்தில் நித்தீசை பரமேஸ்வரி கழுத்தை அறுத்து கொன்று பிணத்தை கழிவறையில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது தெரிந்தது.

இதையடுத்து பரமேஸ்வரியை இன்று காலை போலீசார் பிடித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் இந்த கொலைக்கு கள்ளக்காதலன் உடந்தையாக இருந்தானா? என்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கள்ளக்காதலன் அருள்ராஜையும் பிடித்து வந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதல் ஜோடி சிக்கியிருப்பது அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பத்தூரில் 2½ வயது குழந்தைக்கு மது கொடுத்த 2 பேர் கைது…!!
Next post திருவனந்தபுரம் அருகே 9 வயது மகனை அடித்து உதைத்த தாய் கைது: கைக்குழந்தையுடன் ஜெயிலில் அடைப்பு..!!