இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங் சாந்து…!!
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங் சாந்து நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்தே இவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
2000ம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான காலத்தில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அரசியல் ஆலோசகராக தரண்ஜித் சிங் சாந்து பதவி வகித்துள்ளார்.
1963 ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பிறந்த தரண்ஜித் சிங் சாந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்து, 1988 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார துறையில் இணைந்து கொண்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating