இயக்கச்சியில் வாகன விபத்து! சாரதி வைத்தியசாலையில்…!!
இயக்கச்சி பகுதியில் இன்று காலை கயஸ் வாகனம் ஒன்று விபத்துகுள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் வாகனம் இயக்கச்சி பகுதியில் வீதியின் மறுபக்கத்தில் இருந்த மரத்துடன் மோதியே விபத்துக்குள்ளானதாக பளைப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்து சாரதி தூக்கத்தில் இருந்ததால் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விபத்தில் காயமடைந்த குறித்த வாகன சாரதி கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
அத்துடன் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளையும் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating