முதுகுளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை…!!

Read Time:2 Minute, 41 Second

201608281156057538_Mudukulathur-near-youth-murder_SECVPFராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது மு.தூரி மற்றும் கிடாதிருக்கை கிராமங்கள். இந்த 2 கிராம மக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் இரு கிராமத்து இளைஞர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மு.தூரியை சேர்ந்த கருப்ப சாமி (வயது25), வீரசிங்கம் (26) ஆகியோர் கடலாடி அருகே ஏ.புனவாசலில் கபடி விளையாடிவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது கிடா திருக்கையை சேர்ந்த முத்து ராமலிங்கம் உள்பட 8 பேர் தேவர்குறிச்சி பகுதியில் வழி மறித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து ராமலிங்கம் தரப்பினர், எதிர்தரப்பினரை தாக்கினர்.

இந்த தாக்குதலில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் காரணமாக இரு கிராமங்களிலும் அசம்பாவித சம்பவம் ஏற்படாத வகையில் துணை கண்காணிப்பாளர் கணபதி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியாவில் 18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்…!!
Next post கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ…!!