சோழவந்தான் அருகே கூலி தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை…!!

Read Time:1 Minute, 40 Second

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 42), கூலி தொழிலாளி. இவருடைய உறவினர் கண்ணன் (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு பேசி கொண்டிருந்தனர்.

அப்போது கண்ணன் குடிபோதையில் இருந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளவரசனை சரமாரியாக வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளவரசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை தேடி வருகின்றனர். இறந்துபோன இளவரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூரில் 41 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு…!!
Next post பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு…!!