மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி…!!
இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக இந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 51 வயதான சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் கட்டிடம் கட்டும் பணியில் சங்கர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாடிப்படியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சங்கர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அவர் அலறி துடித்தார். இதனையடுத்து காயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating