வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை…!!
வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர குறிப்பிட்டுள்ளார்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating