மரணத்தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நாடுகடத்தல்…!!
சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது. அவருக்கான மூன்று வருட சிறைத்தண்டனை முடிவடைந்த நிலையிலேயே நாடு திரும்பியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் இலங்கையின் இளைஞர் ஒருவருக்கு 100 கசையடி தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating