இரு வேறு விபத்துக்களில் மூவர் பலி…!!
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல நுழைவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
கார் ஒன்று மின் கம்பத்தில் மோதுண்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அக்மீமன பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்தில் கடவத்தையைச் சேர்ந்த 25 வயது இளைஞரே பலியாகியுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொரு நபர் காயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating