சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கமராவில் பதிவு செய்து வைத்திருத்த சிறுவர்கள் கைது…!!
சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது
பதின்மூன்று வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமியை 13, 14 வயதுடைய சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
சிறுமியின் பொற்றோர்களினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதை தொடர்ந்து (28) இரவு குறித்த சிறுவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளதுடன் கமராவையும் மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜபடுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating