நீரில் மூழ்கி சிறுமி பலி…!!
கலா ஓயாவில் நீரடா சென்று நீரில் மூழ்கிய ஒரே கும்பத்தை சேர்ந்த மூன்று பேரில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்திற்கு யாத்திரைக்கு சென்று மீண்டும் வரும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தந்தை மற்றும் மேலும் ஒரு மகளும் தற்போது கவலைக்கிடமான நிலையில் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சில உறவினர்களுடன் நேற்று மாலை கலா ஓயாவிற்கு நீராட சென்ற போதே அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் 6 வயதான சிறுமி என காவற்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் நிட்டம்பு கலகெடிஹென பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating