விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்கள் மீட்பு: 5 புரோக்கர்கள் கைது..!!
சென்னை அண்ணாநகர், ஆழ்வார்திருநகர், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் அண்ணாநகர் 15-வது மெயின் தெரு, எச்.பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபசாரம் நடப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விபசார புரோக்கர்கள் திருச்சியை சேர்ந்த ராமு(வயது 24), சென்னையை சேர்ந்த சித்திரி(29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
போலீசாரின் ரகசிய விசாரணையில் ஆழ்வார் திருநகர், சுனிதா கார்டன், 5-வது தெரு, பாலாஜி நகரில் விபசார தொழில் செய்து வந்த தேவராஜ்(30), கார்த்திகேயன்(22) ஆகிய 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். சையது ராஜா, பாண்டியன் ஆகிய இரண்டு புரோக்கர்கள் தலைமறைவாகி விட்டனர்.
பரங்கிமலை ஸ்ரீபுரம் காலனி, 1-வது குறுக்கு தெருவில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் விஜயகணேஷ்(33) போலீசார் பிடியில் சிக்கினார். அவரிடமிருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 புரோக்கர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 8 இளம்பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating