பாகுபலியால் தப்பித்த குழந்தை…!!

Read Time:2 Minute, 45 Second

bahubali67--680x365சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவில் படகு இல்லத்திலிருந்து விழுந்த தனது 2 வயது மகனை மீட்டு அவனைத் தூக்கி் பிடித்தபடி நீரில் தத்தளித்த தாய், சில நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் நீரில் மூழ்கி் பலியானார்.

அவரது மகன் பத்திரமாக மீட்கப்பட்டான். அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்தவர் 35 வயதான செல்சி ரஸ்ஸல். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போவல் ஏரியில் உள்ள சுற்றுலாப் படகு இல்லத்திற்கு சென்றிருந்தார் செல்சி. அங்கு படகு இல்லம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

அப்போது அவரது 2 வயது மகன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்சி உடனடியாக தண்ணீரில் குதித்தார். தனது மகனை கைகளால் தூக்கிய அவர் தண்ணீருக்குள் தத்தளித்தார். ஆனாலும் அவரது கை மகனை விடவில்லை. தூக்கி உயர்த்திப் பிடித்தபடி 5 நிமிடம் போராடினார். அதற்குள் உறவினர் ஒருவர் ஓடி வந்து குழந்தையைப் பத்திரமாக வாங்கி படகுக்குள் கொண்டு வந்து விட்டார். ஆனால் அதற்குள் செல்சி மயக்கமாகி விட்டார்.

அவரை உடனடியாக மீட்ட மீட்புப் படையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அவர் மீட்ட அவரது 2 வயதுக் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மகனை மீட்கப் போய் உயிரை விட்ட செல்சி ஒரு வழக்கறிஞர் ஆவார். மேலும் மாரத்தான் ஓட்டக்காரரும் ஆவார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமாவாசையில் பழிவாங்க போகிறதா சுவாதியின் ஆவி? சொல்கிறார் ஆவி அமுதன்…!!
Next post 5 நாள் அரச விடுமுறை எடுத்த ஜனாதிபதி…!!