டிரைவர்களே தேவைப்படாத சுரங்க ரெயில்பாதை: சீனாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்…!!
சீனா தலைநகரான பீஜிங்கில் சுரங்கப்பாதை ரெயில்களின் இயக்கங்களை ஓட்டுனர் இல்லாமல் தானியங்கியாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டது. முதற்கட்டமாக யான்பாங் தடத்தில் இதற்கான பணிகளை சீனா ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் இந்த பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில், ரெயிலின் புறப்பாடு, கதவுகளை திறத்தல் மற்றும் மூடுதல், சுத்தம் செய்தல் போன்ற இயக்கங்கள் தானாகவே நடைபெறும். இந்த பணிகளை செய்வதற்கு ஊழியர்கள் யாரும் இனி தேவையில்லை. இந்த ரெயில்களில் உள்நாட்டு தொழில்நுட்பம் மட்டுமே பயன்படுத்தப்படும்.
பீஜிங்கில் உள்ள சில ரெயில்களுக்கான வழித்தடங்களையும், விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளையும் முழுவதும் தானியங்கியாக மாற்றும் பணிகள் 2020ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating