வீதியில் சென்ற பெண்கள் பரிதாபமாக பலி…!!
குருநாகல் – மாவத்துகம பிரதேசப் பகுதியில் இடம் பெற்ற வேன் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை குருநாகல் பகுதியில் இருந்து கெப்படிகல நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த இரு பெண்கள் மீது மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தமது ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நிதகொல்ல பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட அய்ராங்கணி மற்றும் அனுலாவதி என்ற பெண்களே விபத்தில் சிக்கி மரணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating