டிரெக்டரில் சிக்கி 16 வயது பிள்ளை பரிதாபமாக பலி…!!
சியம்பலாண்டுவ – நுகெவெவ – ஹடஓய பகுதியில் டிரெக்டர் வண்டியொன்றில் சிக்கி 16 வயது பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (29) இரவு ஹடஓய பகுதியிலிருந்து நுகெவெவ பகுதிக்கு டிரெக்டர் வண்டியொன்றில் செல்லும் போது தவறி விழுந்து பிள்ளை பழியாகியுள்ளது.
குறித்த பிள்ளை கீழே விழுந்துள்ளதுடன், டிரெக்டரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதித்தபோது குறித்த பிள்ளை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் டிரெக்டர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating