சைதாப்பேட்டையில் கோவில் குளத்தில் குளித்த வாலிபர் பலி…!!
நெற்குன்றத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் சிறுவயதில் சைதாப்பேட்டை பகுதியில் குடியிருந்தார். எனவே தனது பழைய நண்பர்களை பார்த்து பேசி மகிழ விரும்பினார். அதற்காக சைதாப்பேட்டை வந்த அவர் நண்பர்களுடன் அங்குள்ள காரணீஸ்வரர் கோவில் குளத்தில் ‘டைவ்’ அடித்து குளித்தார்.
நீண்ட நேரமாகியும் தண்ணீருக்குள் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய சீனிவாசனை தேடினர். அப்போது அவர் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் உயிரை விட்டது தெரிய வந்தது. எனவே, அவர் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating