துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல்…!!
தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் அவரது வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைக்கு பின்னரே குறித்த கேர்ணல் பிரதீப் குமார நெத்திசிங்க நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating