வாழப்பாடி அருகே காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை முயற்சி…!!

Read Time:4 Minute, 59 Second

201608311606339654_boyfriend-suicide-attempt-near-Vazhapadi_SECVPFவாழப்பாடி அருகே உள்ள விலாரிபாளையம் ஊராட்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது19). இவரது தந்தை இறந்து விட்டதால் தாய் மற்றும் தம்பியுடன் அந்த பகுதியில் பிரியா வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒண்டிக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் (23) என்பவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மலர்ந்தது.

இருவரும் தனிமையில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இதையடுத்து பிரியா தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். ஆனால் முருகன் காலம் கடத்தி வந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். தந்தை இல்லாததால் யாரும் தனக்கு ஆதரவாக வரமாட்டார்கள் என்றும் கருதிய பிரியா கடந்த 27-ந்தேதி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய முருகன் மறுப்பதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறி இருந்தார். மேலும் தொடர்ந்து 2 நாட்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்தார்.

இதையடுத்து போலீசார் காதலன் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதலியை கரம்பிடிக்க சம்மதித்த முருகன் பதிவு திருமணம் செய்து கொள்வதாகவும் போலீசாரிடம் எழுதி கொடுத்தார். இதனால் பிரியாவும் சந்தோசமாக அங்கிருந்து கிளம்பினார்.

இந்த நிலையில் காதல் ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இதற்காக பிரியா நேற்று காலையிலேயே திருமணத்திற்கு தயாரானார். மதியம் வரை முருகனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் திருமணமும் நடைபெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா தன்னை ஏமாற்றி விட்டதாக புலம்பிய படியே இருந்தார்.

இதற்கிடையே முருகன் நேற்று வி‌ஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் முருகனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலன் வி‌ஷம் குடித்த சம்பவம் காதலி பிரியாவுக்கு தெரிந்துள்ளது. இதனால் பதறி துடித்த அவர் அழுதபடியே சேலம் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். பின்னர் முருகனை பார்த்த அவர் கையை பிடித்த படி கதறினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

முருகன் வி‌ஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததும், அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய பிரியா முயற்சித்ததாலும் மனம் உடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மேலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் லயன்ராக் புயல் கோரத்தாண்டவம் – முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதில் 9 பேர் பலி…!!
Next post தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையில் தீராத காவிரிப் பிரச்சினை…!!