சிங்கப்பூர் சென்ற ரணில், மலேஷியா சென்ற மஹிந்த…!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை 01.10 அளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள 2016ம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் அங்கு செல்லவுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை 01.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மலேஷியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஐந்து நாட்கள் மலேஷியாவில் தங்கியிருக்கும் குறித்த குழுவினர், ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளவே அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating