இரு வேறு விபத்தில் இருவர் பலி : பொலிஸார் வலைவீச்சு…!!
இரண்டு பேரை மோதுண்டு தப்பிச் சென்றுள்ள கார் சாரதி ஒருவரை தேடும் நடவடிக்கையை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு சிலாபம் – கடுனேரிய பிரதேசத்தில் காரில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர், இரண்டு பேரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் சிலாப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த கார், வென்னப்புவ எனும் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதனை கண்டு பிடித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சிலாபம் – புத்தளம் வீதியில் பங்கதெனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating