மஸ்கட்டில் 50 பைசா நாணயத்தை விழுங்கிய இந்திய சிறுவன்: 10 நாட்களுக்கு பிறகு சிகிச்சை மூலம் அகற்றம்…!!

Read Time:3 Minute, 0 Second

201609010922030370_Indian-boy-in-Muscat-Swallow-50-paise-coin-After-10-days-of_SECVPFஓமனில் வசித்து வேலை செய்து வரும் இந்திய நாட்டை சேர்ந்தவர் சச்சின் சுந்தர். இவர் தன் மனைவி மற்றும் மகனுடன் மஸ்கட் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ந்தேதி சச்சின் சுந்தரின் மகன் அதர்வ் (வயது 5) 50 பைசா ஓமன் ரியால் நாணயத்தை விழுங்கி விட்டான்.

பின்னர் அவன், தனது தாயாரிடம் நாணயத்தை விழுங்கி விட்டதாகவும், அது வயிற்றில் சிக்கி வலிப்பதாகவும் கூறினான். உடனே அவர், தனது கணவரை தொலைபேசியில் பேசி வரவழைத்தார். இதைதொடர்ந்து சச்சின் சுந்தர், தனது மகனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு மருத்துவ சிகிச்சை மூலம் நாணயத்தை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த சிறிய நாணயம் அந்த சிறுவன் வயிற்றில் சிக்கி நகர மறுப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பின் வருத்தத்தோடு வீடு திரும்பிய அவர்கள் எப்படியாவது சிறுவன் வயிற்றில் இருந்து இயற்கை உபாதையின் போது வெளியே வந்து விடும் என நினைத்தனர். ஆனால் அந்த நாணயம் வரவில்லை. மேலும் சிறுவன் வலியால் துடித்து கொண்டு இருந்தான்.

நாணயம் விழுங்கி 10 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் ஓமனின் ரூவி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு இந்திய வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயகுமார் பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அந்த நாணயத்தை எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை மூலம் வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அடுத்த 15 நிமிடங்களில் அந்த கருவி மூலம் அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் நாணயம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை…!!
Next post வீட்டு வேலை செய்யக்கூறி சிறுமிக்கு கையில் சூடு வைத்து கொடுமை: ஆசிரியை- மகளிடம் போலீசார் விசாரணை…!!