நுவரெலியாவில் விபத்து: பதுளை பெண் ஸ்தலத்தில் பலி, மூவர் படுகாயம்…!!
நுவரெலியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பதுளையைச் சேர்ந்த நயினா முகமது அய்ரூப நிசா (55 வயது) என்ற பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
அதில் பயணித்த இருவரும் ஆட்டோ சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளானதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்காவிற்கு அருகாமையில் (விக்டோரியா பூங்கா சந்தி) இன்று காலை 9.15 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார்.
அதில் பயணித்த இருவரும் ஆட்டோ சாரதியும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜி.ஜி.செனவிரத்ன தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating