இரு நபர்களிடையே சண்டை – வேடிக்கை பார்த்த பெண் கைது…!!

Read Time:2 Minute, 17 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)திருகோணமலை – தெவனிபியவர பகுதியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரை இன்று (01) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சண்டையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த இளம் பெண் ஒருவர், மண்வெட்டியால் ஒருவரை தாக்கியுள்ளார், இதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சண்டையில் மண் வெட்டியால் தாக்குதலுக்கு உள்ளானவர் மொறவெவ – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த டி.எம். எதிரிசிங்ஹ (48வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இருவர் சண்டையிட்ட போது அதை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், மண் வெட்டியால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நிலையில் எதிரிசிங்ஹ என்பவர், மஹதில்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், ஒரு பிள்ளையின் தாயாரான ரம்யதாஷ பிவ்மன்தி (20 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் சடலம் மீட்பு – தீவிர விசாரணையில் பொலிஸார்..!!
Next post 15 லட்சம் பெறுமதியான முதிரை மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது…!!