விருத்தாசலம் பெண் அடித்துக்கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை – கடலூர் கோர்ட்டு தீர்ப்பு…!!
விருத்தாசலம் மேட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா(வயது 60). இவரது மகன் சண்முகம்(26). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமரேசனுக்கும்(25) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 24.10.2014ல் குமரேசன் அவரது நண்பர்கள் வினாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்கரவர்த்தி, பாலமுருகன் ஆகியோர் சண்முகத்திடம் தகராறு செய்தனர்.
அப்போது சண்முகத்தை குமரேசன் உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதை தடுக்க வந்த சண்முகத்தின் தாய் சகுந்தலாவும் தாக்கப்பட்டார். இதில் சகுந்தலா அதேஇடத்தில் துடிதுடித்து இறந்தார். சண்முகம் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் குமரேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
குமரேசனின் நண்பர்கள் விநாயகமூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சக்கரவர்த்தி, பாலமுருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating