சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்: பாதிக்கபட்டவர்கள் என்ணிக்கை 115 ஆக உயர்வு…!!
சிங்கப்பூரின் அல்ஜூனைத் கிரெசன்ட் பகுதியில், வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் 41 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில், 34 பேர் குணமடைந்து விட்டதாகவும், 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதே பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டு உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதை தொடர்ந்து ஜிகா வைரஸ் தொற்றால பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், “சிங்கப்பூரில், 13 இந்தியர்கள் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அங்குள்ள இந்திய தூதரகம் மத்திய அரசுக்கு செய்தி அனுப்பியுள்ளது” என்றார்.
சீனாவை சேர்ந்த 21 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தூதரகத்திற்கு சிங்கப்பூர் அரசு அறிக்கை அளித்துள்ளது. இதனை சீன வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating