சீனாவில் புயலுக்கு 73 பேர் பலி
Read Time:58 Second
தெற்கு சீனாவில் பிரபிரூன் என்ற புயல் தாக்கியதில் நேற்று வரை 73 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டனர். இந்தப்புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குவான்டோங் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
பிரபிரூன் என்றால் தாய் மொழியில் மழைக்கடவுள் என்று பொருள். இந்த ஆண்டு தெற்கு சீனாவை தாக்கும் 6-வது புயல் ஆகும். பிளீஸ் என்ற புயல் கடந்த ஜுலை மாதம் தாக்கியதில் 600 பேர் பலியானார்கள்.