கோயம்பேடு வாலிபர் கொலையில் 3 பேர் கைது..!!
கோயம்பேடு, தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது மகன் கோபிநாத் (வயது26). அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததையடுத்து கடந்த 29-ந்தேதி பிரியாணி வழங்கினர். இதனை வாங்குவதில் கோபிநாத்துக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்துக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக பகுதியைச் சேர்ந்த முத்துக் குமார், சீனிவாசன், சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating