சென்னை கோட்டையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி…!!
திருவொற்றியூர் மகளிர் போலீசில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் காஞ்சனா. இவர் சென்னை கோட்டையில் இன்று 4-வது நுழைவு வாயல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த மற்ற பெண் காவலர்கள் அவரை காப்பாற்றி உடலில் தண்ணீர் ஊற்றினர்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது.
இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போதுதான் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவர் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இது போன்று செயல்பட்டாரா? அல்லது அதிகாரிகளின் நெருக்கடி காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating