நாட்டிலிருந்து புறப்பட்டார் பான் கீ மூன்…!!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நேற்றிரவு 10.30 மணியளவில் விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றதாக எமது விமான நிலைவய செய்தியாளர் கூறினார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அவர் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார்.
அத்துடன் காலி மற்றும் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
அவரது விஜயத்தின் இறுதி நிகழ்வாக நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து னொண்டிருந்தார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுனக்கப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரவித்த அவர், எப்பொழுதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating