காதலிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: மில் தொழிலாளி கைது…!!
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள தளி வாசல் பகுதியை சேர்ந்த சரவணனின் மகள் ஷீலா ராணி. அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவரை சுரேஷ்குமார் என்ற பஞ்சு மில் தொழிலாளி ஒருதலையாக காதலித்தார்.
கடந்த மாதம் 10-ந்தேதி ஷீலாராணியை சந்தித்த சுரேஷ்குமார் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த ஷீலாராணி, சுரேஷ்குமாரை திட்டி அனுப்பினார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவியிடம், சுரேஷ்குமார் தகராறு செய்து அவரை தாக்கி விட்டு தப்பியோடிவிட்டார். பள்ளிக்கு சென்ற ஷீலா ராணி தனது தோழிகளிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை ஆசிரியர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, சுரேஷ்குமார் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததால் எலி மருந்தை சாப்பிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து சுரேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating