ராமேசுவரம் அருகே சிறுமியை கற்பழித்து கொன்ற தந்தை கைது…!!
ராமேசுவரம் அருகே உள்ள கரையூர் கிராமத்தில் கடலில் ஒரு சிறுமி பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராமலிங்கம், இன்ஸ்பெக்டர் அமுதசெல்வி தலைமையிலான போலீசார் இதுபற்றி விசாரித்து வந்தனர்.
இதே ஊரை சேர்ந்த மாரி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெற்ற மகளையே அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அவளை கொன்று கடலில் வீசியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மாரியை கைது செய்து ராமேசுவரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating