தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது…!!
தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தலைமையில் சென்ற பொலிஸ் சரயன் றிபாட்(5627), பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிலிப்ஸ்(89238), றொசான் (40735), றோகித்த(57654), கலபத்தி (33489), மற்றும் பொலிஸ் சாரதி மதுசங்க (80744) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே குறித்த கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.
இன்று காலை 4.30 மணியளவில் 3 கிலோ 352 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதோடு, தலைமன்னார் கிராமம் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கேரளா கஞ்சா சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வய்ந்தது என தெரிவித்த பொலிஸார், குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating