கைவிட்டுச் சென்ற பாலகனுக்கு பால் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்…!!
மொனராகலை வெல்லவாய பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து சுமார் நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குழந்தையை நேற்று வெல்லவாய நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று ஆஜர்ப்படுத்தி அனுமதியை பெற்ற பின்னர், பொலிஸார் குழந்தையை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பசியில் அழுத குழந்தைக்கு, இந்த குழந்தையை போன்ற குழந்தை இருக்கும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் பாலூட்டியுள்ளார்.
குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் யார் என்பதை கண்டறிய வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating