யாழில் பொல்லால் தாக்கி மனைவி பலி…!!

Read Time:1 Minute, 59 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கோப்பாய், திருநெல்வேலி கலையடி பிரதேசத்தில் கணவன் தாக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று இரவு மனைவியை பொல்லால் தாக்கியுள்ளதாகவும் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகனநாதன் செல்லம்மா 65 வயதுடைய இருபிள்ளைகளின் தாய் எனவும் குறித்த பெண்ணைத்தாக்கிய கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பொலிஸ் பாதுகாப்புடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு ஓர் அதிரடி எச்சரிக்கை…!!
Next post 9 மாதங்களில் 38 ஆயிரம் டெங்கு நோயாளிகள்…!!