ரங்கலயில் 56 வயதானவரைக் காணவில்லை…!!
கண்டி, ரங்கல, எலகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேயிலைத் தொழிற்சாலையில் உத்தியோகஸ்தராக தொழில்புரிந்த 56 வயதான சின்னையா பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 30 ஆம் திகதி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த 30 ஆம் திகதி தன்னிடம் 4000 ரூபா பணத்தை வழங்கிவிட்டுச் சென்றவர், 2.30 அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இருக்குமிடம் தெரியவில்லை என தெரிவித்ததுடன், அழைப்பு துண்டிக்கப்பட்டதாக காணாமற்போனவரின் மனைவி குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் ரங்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அண்மித்த பகுதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரங்கல பொலிஸார் குறிப்பிட்டனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating