மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற கர்ப்பிணித்தாய் பரிதாபமாக மரணம்…!!

Read Time:2 Minute, 37 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புனானை, ஜெயந்தியாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணித்தாய் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணித்தாயை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியும் பொலன்னறுவை பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மரணமடைந்த சேனபுரயைச் சேர்ந்த கர்ப்பிணித்தாயான ஹயாத்து முகம்மது பௌசியா (வயது – 35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருடன் பயணம் செய்த சேனபுரையைச் சேர்ந்த முஹம்மது சாலி பௌசியா (வயது – 43) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், முச்சக்கர வண்டியின் சாரதியான செயினால்ப்தீன் முகம்மது அசனார் (வயது – 36) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கர்ப்பிணித்தாய் சேனபுர பகுதியிலிருந்து வைத்திய பரிசோதனைக்காக ஓட்டமாவடியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பரிசோதித்து விட்டு, மீண்டும் சேனபுர பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரத்திக்கும், விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?… இது மூடநம்பிக்கை இல்லை நண்பர்களே..!!
Next post பொலிஸாரின் கண்ணில் மண்னை தூவி மண்அகழும் கடத்தல்காரர்கள்…!!