பொலிஸாரின் கண்ணில் மண்னை தூவி மண்அகழும் கடத்தல்காரர்கள்…!!
முள்ளிவாய்க்காலில் சட்டவிரோதமாக மண்கடத்தும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.
குறித்த மண்கடத்தல் இலங்கை கடற்படையின் பாவனையில் உள்ள கப்பல்லடி இரண்டாம் பாதையூடகவே கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு பரந்தன் பிரதான பாதையில் பொலிஸாரின் கண்காணிப்பு அதிகமாக காணப்படுவதால் கடற்படையினரின் பாதையை பயன்படுத்துவதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மண் அகழும் காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமான கணிகள் என்றும் இவ்வாறு மண்அகழ்வதால் சமதரையில் பாரிய கிடங்குகள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மழைகாலத்தில் நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் உரிய அதிகாரிகள் கவனம் எடுக்கவேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating