முச்சக்கர வண்டியை மீட்க கள்ளக் காதலனை கொன்ற பெண்…!!

Read Time:2 Minute, 36 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)இரத்தினபுரி, பலாங்கொடை, முல்கம பிரதேசத்தில் தனது நான்காவது கள்ளக் காதலனை கொலை செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முல்கம காட்டுப் பகுதியில் வைத்து கொல்லப்பட்ட நபரின் சடலம் மீடு்கப்பட்டுள்ளது.

கல்தொட்டை பகுதியில் வசித்து வந்த 35 வயதான மாலக பண்டார செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நபரின் கள்ளக்காதலியே கொலை செய்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த பெண் தனது முச்சக்கர வண்டியை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார். முச்சக்கர வண்டி வட்டியினால், மூழ்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கொல்லப்பட்ட நபரிடம் இருக்கும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் நோக்கி்ல், அவரை முல்கம காட்டுக்கு அழைத்துச் சென்று கோடரியால் தாக்கி கொலை செய்து விட்டு பணத்தையும் அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் பெண்ணிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து கொல்லப்பட்டவரின் தங்க ஆபரணங்கள் சிலவற்றையும் செல்போன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பெண்ணின் மற்றுமொரு கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாரின் கண்ணில் மண்னை தூவி மண்அகழும் கடத்தல்காரர்கள்…!!
Next post மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்…!!