இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 14பேர் வைத்தியசாலையில்…!!
பதுளை – பசறை, ஊவா வெல்லஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அருகாமையில், மாத்தளையில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பேருந்து ஒன்றும் பசறையில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளில் 14 பேர் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating